பிரிக்ஸ் நாடுகளுக்கும், ஐரோப்பிய-ஆசிய பொருளாதார கூட்டணி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள், தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் ஆகியோருக்குமிடையேயான பேச்சுவார்த்தை ரஷியாவின் உஃபாவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், பிரேசில் அரசுத் தலைவர் ரோசேப், இநதியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் சூமா முதலிய தலைவர்கள் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பொது மக்களின் நலன்களை உயர்த்துவது குறித்து, பன்னாட்டுத் தலைவர்கள் விவாதித்தனர்.
பன்னாட்டுத் தலைவர்கள் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, புதிதாக வளர்ந்து வரும் நாடுகளும், வளரும் நாடுகளும் ஒன்றுபட்டு ஒத்துழைக்கும் ஆக்கப்பூர்வ சமிக்கையை விடுத்துள்ளனர். பல்வேறு நாடுகளும் தொலைநோக்கு பார்வையில், ஒத்துழைத்து, கூட்டாக வெற்றி பெறும் கூட்டாளியுறவை உருவாக்க வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாத்து, வறுமையை ஒழித்து, ஒன்றுக்கொன்றான தொடர்பு மற்றும் வட்டாரப் பொருளாதார ஒருமைப்பாட்டை வலுப்படுத்தி, வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவாக்கி, பொது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று புதின் தன் உரையில் தெரிவித்தார்.