ஜூலை 9ஆம் நாள், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கான 7ஆவது உச்சிமாநாடு, ரஷியாவின் உஃபாவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், ரஷிய அரசுத் தலைவர் புதின், பிரேசில் அரசுத் தலைவர் ரோசெஃப், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவர் சூமா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். பிரிக்ஸ் நாடுகளின் கூட்டாளியுறவு எனும் தலைப்பில்,தற்போதைய சர்வதேச நிலைமை, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியன குறித்து, இந்நாடுகளின் தலைவர்கள் விவாதித்து, ஒத்த கருத்துக்களை எட்டி, அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளனர்.