• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உஃபாவில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
  2015-07-11 19:37:16  cri எழுத்தின் அளவு:  A A A   

இக்கூட்டத்துக்குப் பிறகு, பார்வையாளர் நாடான ஆப்கானிஸ்தான், மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அழைப்பை ஏற்று, பெருமளவிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி நிலைமை மற்றும் எதிர்காலம், தற்போதைய முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றி கருத்துக்களைப் பரிமாறி பரந்தளவில் ஒத்த கருத்துக்கு வந்துள்ளனர்.

ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில், ஒற்றுமை மற்றும் உதவியோடு கூட்டாக அறைகூவலை எதிர்நோக்குகின்றோம் என்னும் முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, இப்பிரதேசத்தின் பொது சமூகத்தை உருவாக்க வேண்டும். உறுப்பு நாடுகளின் பாதுகாப்பையும் நிதானத்தையும் பேணிக்காத்து, ஒத்துழைப்பு உள்ளடக்கத்தை பயன் தரும் முறையில் விரிவாக்கி, தலைமுறை தலைமுறையான நட்புறவை வலுப்படுத்தி, புதிய துவக்கத்திலிருந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் புதிய வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040