அவரது சீராய்வு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 30ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணை பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதைத்தவிர, அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு மேமனுக்கு ஆதரவாக கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் சமர்ப்பித்துள்ளது..
மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவரால் கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.