தலிபான் அமைப்பின் தலைவர் ஒமரின் உயிரிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ள, அவ்வமைப்பின் தலைவர்களின் கோரிக்கையின்படி, திட்டப்படி 31ஆம் நாள் நடைபெற இருந்த 2வது சுற்று ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை ஒத்திப்போடப்பட்டுள்ளது என்று என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் 30ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகள் 4 மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஒமர் உயிரிழந்தார் என்று ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆணையம் 29ஆம் நாள் உறுதிப்படுத்தி தகவலை வெளியிட்டது. இது வரை, இது தொடர்பாக, தலிபான் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.