2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு விண்ணப்பம் செய்யும் பெய்ஜிங்கின் சார்பில், சீன ஒலிம்பிக் ஆணையத் தலைவரும் சீனத் தேசிய விளையாட்டு ஆணையத்தின் தலைவருமான லீயு பேங் ஜுலை 31-ஆம் நாள் மலேசியாவில் விண்ணப்ப சொற்பொழிவு ஆற்றினார்.
விளையாட்டுப்போட்டிக்கு செயற்கையாக பனியை உருவாக்குவது பற்றி லீயு பேங் கூறுகையில், 2022-ஆம் ஆண்டு, இயல்பாக பனி பெய்யும் அளவு பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில், ஏற்கனவேயுள்ள பனியை உருவாக்கும் வசதிகளை பெய்ஜிங் பயன்படுத்தும் என்றார். பனியைப் பயன்படுத்தும் விளையாட்டுப் போட்டிகளின் உச்ச நிலைமையில், செயற்கை பனியை உருவாக்குவதற்கு தேவைப்படும் நீர் அளவு, உள்ளூர் நீர் வினியோக அளவில் 1விழுகாட்டுக்குள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.