• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக பாசிச எதிர்ப்புப் போரில் சீனாவின் தகுநிலையும் பங்கும்
  2015-08-06 15:04:19  cri எழுத்தின் அளவு:  A A A   

உலக பாசிச எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த முக்கிய 4 நாடுகளில் சீனா ஒன்றாகும். ஒன்று, பாசிச ஊடுருவலுக்கு எதிர்ப்பதில் சீனா முதன்முதலில் பங்கெடுத்துள்ளது. 1937ஆம் ஆண்டு ஜுலை 7ஆம் நாள் பெய்ஜிங் நகரின் லுகுவ்சியாவ் எனும் இடத்தில் ஜப்பானின் படைப்பிரிவு முதலாக துப்பாக்கி சூடு நடத்தியது. அப்போதைய கோமின்டாங் அரசு அனைத்து சீனப் படைவீரர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது முதல், 1945ஆம் ஆண்டு போரில் தோல்வியுற்றதாக ஜப்பான் அறிவித்தது வரை, மொத்தமாக இப்போர் 8 ஆண்டுகளாக நடந்தது.

 1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஜப்பான் ஷாங்காய் மாநகரின் தென் தொடர்வண்டி நிலையத்தின் மீது வான் தாக்குதல் தொடுத்தது. அதே ஆண்டு ஜப்பானின் படை நான்ஜிங் நகரில் சுமார் 3 இலட்சம் அப்பாவி மக்களை படுகொலை செய்து நான்ஜிங் நகரைக் கைப்பற்றியது. அப்போதைய கோமின்தாங் கட்சி அரசு பயனுள்ள முறையில் ஜப்பானின் ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியவில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான படைப் பிரிவு இந்த எதிர்ப்புப் போரில் முக்கிய பங்காற்றியுள்ளது.

1941ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 7ஆம் நாள் அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தை ஜப்பான் மறைமுகமாகத் தொக்குதல் தொடுத்த்து. அதனுடன் ஜப்பானின் போர் இலக்கு சீனாவிலிருந்து அமெரிக்காவாக மாற்றியது. அடுத்த நாள், ஜப்பான் மீது போர் நடத்தப் போவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், உலக நாடுகளும் ஜப்பானின் மீது வர்த்தக தடையை விதிக்குமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. டிசம்பர் 9ஆம் நாள் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு எதிராக போர் நடத்த சீனாவின் கோமின்தாங் அரசு அறிவித்த்து.

விரைவில், ஜப்பானுடன் நடுநிலையில் உள்ள சோவியட் யூனினைத் தவிர, பிரிட்டன் உள்பட கூட்டணி நாடுகளும் ஜப்பானுக்கு எதிராக போர் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் அது முதல் 2ஆவது உலக ப் போரின் ஒரு பகுதியாக மாறியது. பிறகு, யுனான்-மியன்மர் நெடுஞ்சாலை, ஒட்டக முதுகு விமான நெறி, மியன்மார், இந்தியா ஆகியவை வழியாக அமெரிக்கா சீனாவுக்கு அதிக இராணுவ வசதிகளை அனுப்பி சீனாவுக்கு ஆதரவு அளித்துள்ளது. 1943ஆம் ஆண்டு நவம்பர் காய்ரோ அறிக்கை உருவாக்கப்பட்டது. போரிடும் ஆற்றல் பற்றாக்குறையை உணர்ந்த ஜப்பான், சீனாவில் தனது போர் ஆற்றலைக் குறைந்துள்ளது.

1945ஆம் ஆண்டு ஜுலை 26ஆம் நாள், அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகியவை போஸ்தான் சுற்ற்றிக்கையை வெளியிட்டு, நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று ஜப்பானை வற்புறுத்தின. 1945ஆம் ஆகஸ்ட் ஜப்பானில் அமெரிக்க அடுத்தடுத்து இரு அணு குண்டுகளை வீசியது. அதேவேளையில், சீன மக்கள் நாட்டின் உரிமைப் பிரதேசத்தை மீண்டும் கைபற்றி வந்த வண்ணம் இருந்தனர். ஆகஸ்ட் 15ஆம் நாள் தோல்வியை ஏற்றுக்கொண்டு நிபந்தனை இன்றி சரணடைவதாக ஜப்பான் பேரரசர் அறிவித்தார். செப்டெம்பர் 2ஆம் நாள் ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் மிசூலி எனும் அமெரிக்காவின் ராணுவக் கப்பலில் சரணமடைந்த்து தொடர்பான அறிக்கையில் கையொப்பமிட்டார்.

2ஆவது உலகப் போர் வெற்றி பெற்றதில் சீனா மற்றும் பல்வேறு நாடுகளின் மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். வெற்றிக் கனியைப் பேணிக்காத்து, அமைதி, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அடைந்த உலகை உருவாக்குவது என்பது பல்வேறு உலக நாடுகளின் பொது கடமையாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040