ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 70ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கையின் நோக்கம், வரலாற்றை நினைவில் வைத்து, போரில் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூர்ந்து, அமைதியைப் பேணிமதித்து, எதிர்காலத்தை உருவாக்குவதாகும். இந்த நடவடிக்கை குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரானது அல்ல. தற்போதைய சீன-ஜப்பான் உறவுடன் நேரடி தொடர்பு இல்லை என்று சீனத் துணை வெளியுறவு அமைச்சர் சாங் மிங் 25ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேள்விக்குப் பதலளித்த போது தெரிவித்தார்.
மேலும், இந்நடவடிக்கையில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்கள், பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த, பரந்த பிரதிநிதித்துவம் வாய்ந்தவர்கள். வரலாற்றை நினைவில் வைத்து அமைதியைப் பேணிக்காப்பதில் சீன மக்களும் உலக மக்களும் ஒத்த கருத்து மற்றும் மன உறுதியையும் கொண்டிருப்பதை இது காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.