இவ்வாண்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 70ஆம் ஆண்டு நிறைவு ஆகும். இதை நினைவு கூறும் வகையில், பல நினைவு நிகழ்ச்சிகள் செப்டம்பர் 2, 3 ஆகிய நாட்கள் தலைநகர் பெய்ஜிங்கில் சிறப்பாக நடைபெறும். இதற்கிடையில், உலக நாடுகளின் செய்தியாளர்கள் வருகை தந்து இதை நேரில்காண்பதை சீனா வரவேற்கிறது என்று 3ஆம் நாள் திங்கட்கிழமை அறிவிக்கப்ப்ட்டுள்ளது.
இந்த நினைவு நிகழ்ச்சிகளை நேரில்காண விரும்பும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள், ஆகஸ்டு 3ஆம் நாள் முதல் ஆகஸ்டு 18ஆம் நாள் வரை reg.kzjn70.cn என்ற இணையதளத்தில் உலா வந்து பெயரை முன்பதிவுச் செய்வது அவசியம்.
மேலும், நினைவு நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, பெய்ஜிங்கில் செய்தி மையம் அமைக்கப்பட்டு, செய்தியாளர்களுக்கு சேவைபுரியும் என்றும் தெரிகிறது.