திபெத் பணி பற்றிய 6ஆவது கலந்தாய்வு கூட்டம் பற்றி மக்கள் நாளேடு 28ஆம் நாள் தொடர்ந்து விமர்சனக் கட்டுரையை வெளியிட்டது.
தாய்நாட்டின் ஒன்றிணைப்பு, தேசிய இன ஒற்றுமை ஆகியவை திபெத் பணியின் முக்கிய அடிப்படை பகுதியாகும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார். சமூகத்தின் தொடர்ச்சியான, நீண்டகாலம் மற்றும் பன்முக நிதானத்தைக் கண்டிப்பான முறையில் நனவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஷி ச்சின்பீங்கின் முக்கிய உரை, திபெத்தின் சமூக நிதானம் மற்றும் நீண்டகால அமைதிக்கு முக்கிய நடைமுறை முக்கியத்துவமும் நெடுநோக்கு முக்கியத்துவமும் வாய்ந்தது என்று இக்கட்டுரை கூறியது.