லிபியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கப்பல் கவிழ்ந்து விபத்து
2015-08-28 19:30:26 cri எழுத்தின் அளவு: A A A
400 குடியேறுவோரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று 27ஆம் நாள் லிபியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கவிழ்ந்து மூழ்கியது. இதுவரை 201 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 147 பேர் சூவாராவுக்கு அருகிலான சட்டவிரோதமாக குடியேறுவோர் தடுப்புக் காவல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன், 82 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன. 100க்கு மேலானோர் காணாமல் போயினர். ஆனால் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு என்று லிபிய செய்தி ஊடகங்கள் 28ஆம் நாள் தெரிவித்தன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய