• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை
  2015-08-31 14:21:40  cri எழுத்தின் அளவு:  A A A   
தேசிய அளவிலான தலைசிறந்த மாவட்ட கட்சிக் குழுத் தலைவர்களைச் சந்தித்த போது நிகழ்த்திய உரை எனும் முக்கிய கட்டுரை செப்டம்பர் முதல் நாள் ஜியூ ஷி எனும் இதழில் வெளியிடப்பட உள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் இந்த உரையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கட்டமைப்பு மற்றும் நாட்டின் ஆட்சி கட்டமைப்பில் மாவட்ட நிலை ஆற்றிய முக்கிய பங்கை உறுதிப்படுத்தினார். பொருளாதாரத்தை வளர்ப்பது, மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்வது, நிலைப்புத்தன்மையைப் பேணிக்காப்பது, நாட்டின் நிரந்தர அமைதியை முன்னேற்றுவது ஆகியவற்றில் மாவட்டக் கட்சிக் குழுச் செயலாளர்களின் பங்கிற்கு அவர் முக்கியத்துவம் அளித்துள்ளார்.

ஷிச்சின்பிங் நிகழ்த்திய இந்த முக்கிய உரை இதழில் வெளியிடப்படுவது, கட்சி அமைப்பு மற்றும் நாட்டு ஆட்சியின் அடிப்படையை வலுப்படுத்துவதற்கும், ஓரளவு வசதியான சமூகத்தை பன்முகங்களிலும் கட்டியமைப்பதற்கும் வழிகாட்டும் என்று கருதப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040