• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன, கசகஸ்தான் அரசுத் தலைவர்களின் சந்திப்பு
  2015-09-01 09:10:35  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் ஆகஸ்ட் 31ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மா மண்டபத்தில் கசகஸ்தான் அரசுத் தலைவர் நாசார்பாயேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் இரு நாட்டுறவை வெகுவாக பாராட்டுவதோடு, இரு நாட்டுறவின் வளர்ச்சியை மேலும் உயர் நிலைக்கு முன்னேற்ற ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

இரு நாட்டுறவு நன்றாக பாய்ச்சல் வடிவத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. புதிய நிலைமையில் இரு நாடுகளும் கையோடு கைகோர்த்து, தொலைநோக்கு பார்வையில் இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

வர்த்தகம், முதலீடு, உற்பத்தி திறன், அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம், சுற்றுலா, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பை சீனாவுடன் இணைந்து, வலுப்படுத்த கசகஸ்தான் விரும்புவதாக நாசார்பாயேவ் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040