பிரான்ஸ் தலைமையமைச்சர் மன்னுயேல் வால்ஸும், ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் துணை தலைவர் திம்மெர்மன்ஸும் ஆகஸ்ட் 31ஆம் நாள் வட பிரான்ஸின் காலெய்ஸ் நகரில் பயணம் மேற்கொண்டு, குடியேறுவோர் பிரச்சினையைப் பற்றி புலனாய்வு செய்தனர். காலெய்ஸ் பிரதேசத்தில் மேற்கொள்ளும் மனித நேய மீட்புதவிக்காக ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸுக்கு 50 லட்சம் யூரோவை வழங்கும் என்று திம்மெர்மன்ஸ் அன்று அறிவித்தார்.
குடியேறுவோர் பிரச்சினை நீண்டக்கால பிரச்சினை ஆகும். குடியேறுவோர் பிரச்சினையின் கட்டுப்பாட்டில் பங்கெடுக்க பிரான்ஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று வால்ஸ் அன்று நிகழ்த்திய உரையில் சுட்டிக்காட்டினார். 2016ஆம் ஆண்டின் துவக்கத்தில் காலெஸில் குடியேறுவோருக்கான புதிய முகாமை பிரான்ஸ் கட்டியமைக்கும் என்று அவர் தெரிவித்தார்.