4வது உலக நாடாளுமன்றத் தலைவர்கள் மாநாடு ஆகஸ்ட் 31ஆம் நாள் நியுயார்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் துவங்கியது. சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டித் தலைவர் சாங் தேஜியாங் இம்மாநாட்டில் கலந்து கொண்டு, மக்களின் குரலைக் கேட்டறிந்து, மேலும் நியாயமான ஜனநாயக உலகத்தை உருவாக்குவதென்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களும் ஒத்த கருத்துக்களை வலுப்படுத்தி, முயற்சியுடன் ஒத்துழைத்து, மேலும் நியாயமான ஜனநாயக உலகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றி, நிரந்தர அமைதி மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவதற்கு சிறந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.