சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் செப்டம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் மக்கள் மண்டபத்தில், பாகிஸ்தான் அரசுத் தலைவர் மம்னூன் ஹூஸைன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் வெற்றி பெற்ற 70 ஆண்டு நினைவு நடவடிக்கையில் மம்னூன் ஹூஸைன் கலந்துகொள்வதற்கு, ஷி ச்சின்பீங் வரவேற்பு தெரிவித்தார். பாகிஸ்தானுடனான உறவில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானுடன் இணைந்து, இரு தரப்புகளின் கூட்டு சமூகத்தை தொடர்ந்து விரிவாக்கி, சீனா மற்றும் அண்டை நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஹூஸைன் கூறுகையில், சீன-பாகிஸ்தான் பொருளாதார வழிபாதையின் கட்டுமானத்தை இரு தரப்பும் முயற்சியுடன் கட்டியமைத்து, இரு நாடுகளின் பல்வேறு துறைகளிலான பயனுள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சர்வதேச விவகாரத்தில் சீனாவுடனான ஒத்துழப்பை வலுப்படுத்த பாகிஸ்தான் பாடுபடும் என்று மம்னூன் ஹூஸைன் தெரிவித்தார்.