சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத்தலைவரும், மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷி ச்சின்பிங், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றிபெற்றுள்ள 70ஆம் ஆண்டு நிறைவுக்கான நினைவு மாநாட்டில் உரை நிகழ்த்தினார். போர் கண்ணாடி போன்று பிரதிபலிப்பவை. போர் மூலம் மக்கள் அமைதியை பேணிமதித்துக் கொள்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
அமைதியைப் பேணிகாக்கும் வகையில், சீனா, அமைதியான வளர்ச்சி பாதையை எப்பொழுதும் ஊன்றிநிற்கும். மனித குலத்தலைவிதியின் பொது சமூகக் கருத்து உறுதியாக உருவாக்க வேண்டும். இதற்காக, சீனா, 3 இலட்சம் படைவீரர்களைக் குறைக்கும் என்றும் ஷி ச்சின்பிங் அறிவித்தார்.