• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செப்டம்பர் 3ஆம் நாள் ஜப்பானிய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான சீன மக்களின் வெற்றி நினைவு நாள் பற்றிய அறிமுகம்
  2015-09-03 11:14:24  cri எழுத்தின் அளவு:  A A A   
1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் நாள், ஜப்பான் சரணடைவு ஆவணத்தில் கையொப்பமிட்டது. சீனா, சோவியத் யூனியன் உள்ளிட்ட கூட்டணி நாடுகள், ஜப்பானின் சரணடைவை ஏற்றுக்கொண்டன. அதனுடன், இரண்டாவது உலகப் போர், உலக மக்களின் மகத்தான வெற்றியில் முடிவுக்கு வந்தது. 2014ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டி வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒன்றை அங்கீகரித்து, செப்டம்பர் 3ஆம் நாளை, ஜப்பானிய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான சீன மக்களின் வெற்றி நினைவு நாளாக உறுதிப்படுத்தியது. சீனா சட்டமியற்றல் முறையில், “ஜப்பானிய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான சீன மக்களின் வெற்றி நினைவு நாளை” உறுதிப்படுத்தியது, இப்போரில் வீரஞ்செறிந்த தியாகிகளையும், இப்போருக்குப் பங்காற்றிய அனைவரையும் மேலும் நன்றாக நினைவுகூர்வதற்கும். நாட்டின் அரசுரிமை, உரிமைப் பிரதேச ஒருமைப்பாடு மற்றும் உலக அமைதியை சீன மக்கள் உறுதியாக பேணிகாக்கும் உறுதியான நிலைப்பாட்டை இது காட்டியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040