• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
படைக்கலக் குறைப்பு பற்றி தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில்
  2015-09-03 16:33:42  cri எழுத்தின் அளவு:  A A A   
நினைவு மாநாட்டிற்குப் பிறகு, சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யாங்யூஜுன், அணி வகுப்பு மற்றும் படைக்கலக் குறைப்பு பற்றி பதிலளித்தார்.

சீனா 3 இலட்சம் படையினர்களைக் குறைக்கும் என்று சீன அரசுத் தலைவர் ஷீச்சின்பீங் மாநாட்டில் அறிவித்தார். சீனா, உலகில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து, அமைதியைப் பேணிக்காத்து, கூட்டாக வளரும் நல்லெண்ணம் மற்றும் விருப்பத்தை இது காட்டுகிறது. சர்வதேச இராணுவக் கட்டுப்பாடு மற்றும் படைக்கலக் குறைப்பை முன்னேற்றும் சீனாவின் பொறுப்பேற்கும் மனப்பான்மையையும் இது எடுத்துக்காட்டியுள்ளது என்று யாங்யூஜுன் கூறினார்.

இந்த முறை படைக்கலக் குறைப்பு, படிப்படியாக செயல்படுத்தப்பட்டு, 2017ஆம் ஆண்டுக்கு முன்பு அடிப்படையில் நிறைவேற்றப்படும். இது, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும நாட்டின் முக்கிய அரசியல் தீர்மானம் மற்றும் அறிவிப்பில் ஒன்றாகும். சீனா எப்போதுமே அமைதியான வளரும் பாதையை ஊன்றி நின்று, தற்காப்புக் கொள்கையைச் செயல்படுத்தி வருகிறது. உலக மற்றும் பிரதேச அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்கும் உறுதியான ஆற்றலாக சீனா திகழ்கின்றது என்று இது மீண்டும் காட்டுவதாக யாங்யூஜுன் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040