சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவு
2015-09-08 20:31:12 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்வேறு இன மக்கள் மற்றும் பல்வேறு துறையினர்களை அடங்கிய சுமார் 20 ஆயிரம் பேர் செப்டம்பர் 8ஆம் நாள் லாசா நகரிலுள்ள போதலா மாளிகை சதுக்கத்தில் ஒன்று திரண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், வாழ்த்து பலகையில், பல்வேறு தேசிய இனங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி, அழகான திபெத்தை உருவாக்க வேண்டும் என்ற சொற்களை எழுதினார். மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவருமான யூ செங்ஷெங் இம்மாநாத்தில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய