நாடளவில் இருந்து கல்வித் துறையின் முன்மாதிரிகளையும், சிறந்த கிராம ஆசிரியர்களின் பிரதிநிதிகளையும், சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 8ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்தார்.
நாட்டின் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சி மிக முக்கியமானது. எனவே, கல்விப் பணியை ஆட்சிச் செய்யும் பணிகளில் முதன்மையாக கொண்டு, சீனாவின் பல்வேறு நிலை அரசு வாரியாங்கள் செயல்பட வேண்டும் என்று லீ கெச்சியாங் உரைநிகழ்த்தியபோது தெரிவித்தார்.
நிதி வரவு செலவுப் பிரச்சினையை எதிர்கொள்ளும் போதிலும், கல்விக்கான ஆதரவு குறையக் கூடாது என்றும், கல்வி மூலம் நாட்டை வலிமைப்படுத்தும் மனவுறுதி மாறாது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.