சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவும் 25ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, செய்தியாளர் கூட்டத்தில் கூட்டாகக் கலந்து கொண்டனர்.
தென் சீனக் கடல் பிரச்சினை பற்றி குறிப்பிடுகையில், தென் சீனக் கடல் பகுதியில் அமைதியையும் நிதானத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்று இரு நாடுகளும் கருதுவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார். இப்பகுதியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலம் சர்ச்சையை அமைதியாகத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் ஆதரிவு தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஜனநாயகம், மனித உரிமை, இணையப் பாதுகாப்பு முதலிய பிச்சினைகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளித்தனர்.