ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கி மூனும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் 26ஆம் நாள் சனிக்கிழமை நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். உலக அரங்கில் சீனாவின் தலைமை ஆற்றல் தெளிவாகக் காணப்படுகிறது என்று பான் கி மூன் பாராட்டியுள்ளார். ஐ.நா.வுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுவதை எதிர்பார்ப்பதாக இப்பேச்சுவார்த்தையின்போது அவர் தெரிவித்தார்.
ஐ.நா.வின் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றிய போக்கில் சீனாவின் பங்களிப்புகளையும், 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடரவல்ல வளர்ச்சி இலக்குகளை வகுக்கும் போக்கில் சீனாவின் இடைவிடாத முயற்சிகளையும், பான் கி மூன் உயர்வாகப் பாராட்டினார்.
உலக காலநிலை மாற்றம் தொடர்பாக, சீன-அமெரிக்க தலைவர்கள் எட்டியுள்ள கூட்டு அறிக்கை குறித்து, பான் கி மூன் பேச்சுவார்த்தையின்போது குறிப்பிட்டார். சீனா தொடர்ந்து தலைமை பங்காற்றி வருவதே மிகவும் முக்கியமானது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.