சீனாவும் ஐ.நாவும் கூட்டாக நடத்திய தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு வட்டமேசை கூட்டம் 26ஆம் நாள் நடைபெற்றது. ஐ.நா தலைமைச் செயலாளர் பான்கிமூன் மற்றும் தென் ஆபிரிக்கா, நைஜீரியா, பாகிஸ்தான் மலேசியா முதலிய நாடுகளின் தலைவர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கு சீனா வழங்கிய ஆதரவுக்கு அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் கூட்டத்தில் முன்வைத்த முன்மொழிவுகளை அவர்கள் பாராட்டினர். அந்த முன்மொழிவுகள், விரிவாக உள்ளது. நடைமுறையை ஏற்கின்ற அவரது முன்மொழிவுகள், செயல்படுத்துவதற்கு உகந்ததாக உள்ளது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.