சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27-ஆம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாற்ற பிரச்சினை பற்றிய தலைவர்களது நண்பகல் விருந்து கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஐ.நா.தலைமைச் செயலாளர் பான் கி மூன் இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கினார். பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய பேரவை உள்ளிட்ட 30 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் கூறுகையில், சீனா பொறுப்பேற்கும் மனப்பான்மையில், காலநிலை மாற்ற பிரச்சினையைச் சமாளித்து வருகின்றது என்றார். தத்தம் நாட்டின் நிலைமைக்கு ஏற்கும் கரி குறைந்த வளர்ச்சி வழிமுறையை சீனா ஆக்கப்பூர்வமாக தேடி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையில், பாரிஸ் காலநிலை மாற்ற மாநாட்டில் நியாயமான சரிசமமான உடன்படிக்கையை உருவாக்க செய்யும் வகையில், பல்வேறு நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக கருத்து தெரிவித்தனர்.