உலக மகளிர் உச்சிமாநாடு 27ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள ஐ.நா.வின் தலைமையக்கத்தில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இம்மாநாட்டின் துவக்க விழாவில் கலந்து கொண்டு 'மகளிர்களுக்கான பன்முகமான வளர்ச்சியை விரைவுப்படுத்தி, இன்பமான உலகத்தை அமைப்பது' என்ற தலைப்பில் உரை ஆற்றினார். சீன அரசுத் தலைவர் இத்தகைய உச்சி மாநாட்டில் பங்கேற்பது, வெளியுறவுத் துறையில் சீனா பல்வகை விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதைக் குறிக்கிறது. மாநாட்டில் ஷிச்சின்பிங் ஆற்றிய உரை, சர்வதேச சமூகத்திடம் சீனச் சமூகத்தின் பன்முகமான வளர்ச்சியை வெளிக்காட்டுகிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
சீனாவின் 'ஃபூட்டன் பல்கலைக்கழகத்தின்' சர்வதேச உறவுக் கல்லூரியின் துணைத் தலைவர் வூ ஷின்போ இது குறித்து பேசுகையில், சீன அரசுத் தலைவர் உலக மகளிர் உச்சிமாநாட்டுக்குத் தலைமை தாங்கி நடத்தியதில் இருந்து, சீனாவின் பெண்களின் தகுநிலை உயர்ந்துள்ளது என்ற உண்மை தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டார்.