சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 28ஆம் நாள் நியூயார்க்கில் ஈரான் அரசுத் தலைவர் ருஹானியுடன் சந்தித்துரையாடினார்.
ஈரானுடன் உறவை வளர்ப்பதில் சீனா பெரும் கவனம் செலுத்தி வருகின்றது. ஈரானும், அணு ஆற்றல் பிரச்சினையுடன் தொடர்புடைய ஆறு நாடுகளும் உருவாக்கிய பன்முக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்திய பிறகு, சீன-ஈரான் உறவின் வளர்ச்சியில் புதிய வாய்ப்புகள் ஏற்படும் என்று ஷீ ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
சீனத் தலைவர்களுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பொருளாதார வர்த்தகம், எரியாற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்டகால நெடுநோக்கு தன்மையுடைய ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு தரப்புறவின் வளர்ச்சியை விரைவுபடுத்த ஈரான் விரும்புவதாக ருஹானி தெரிவித்தார்.