சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் செப்டம்பர் 28ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் ஐ.நா அமைதிகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அமைதி, மனித குலத்தின் பொது விருப்பம் மற்றும் உன்னத இலக்காகும். ஐ.நாவின் அமைதிகாப்பு நடவடிக்கை, உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிகாக்கும் முக்கிய வழிமுறையாக திகழ்கின்றது என்று ஷீ ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
அடிப்படை அமைதிகாப்பு கோட்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். ஐ.நா பாதுகாப்பவை தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அமைதிகாப்பு நடவடிக்கை அமைப்பு முறையை மேம்படுத்த வேண்டும் என சீனா கருதுவதாக ஷீ ச்சின்பிங் வலியுறுத்தினார்.