சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 28ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் 70ஆவது ஐ.நா. பொதுப் பேரவையின் விவாதக் கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். அமைதி, வளர்ச்சி, சமத்துவம், நியாயம், ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவை, மனிதகுலத்தின் கூட்டு மதிப்பாகவும், ஐ.நாவின் உன்னத இலக்காகவும் திகழ்கிறது என்று அவர் வலியுறுத்தினார். தற்போதைய உலகில், பல்வேறு நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. ஐ.நா. சாசனத்தின் கோட்பாடு மற்றும் கொள்கையைக் கையேற்றி வெளிக்கொணர்ந்து, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியை மையமாகக் கொண்ட புதிய சர்வதேச உறவை நிறுவி, மனிதகுலத்துக்கு பொதுச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.