சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டெம்பர் 22ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு, ஐ.நா கூட்டத் தொடரில் கலந்து கொண்டார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இப்பயணம் பற்றி செய்தியாளர்களிடம் விவரித்தார்.
பயணத்தின் போது ஷி ச்சின்பிங் இரு தரப்பு மற்றும் பல தரப்பு நடவடிக்கைகளில் பங்கெடுத்து, பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த பிரமுகர்களைச் சந்தித்து பேசினார். சீனா மற்றும் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் அவரது இப்பயணத்தின் கனியை வெகுவாக மதிப்பிட்டனர்.
சீன-அமெரிக்க உறவின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாமல், உலக அமைதி வளர்ச்சிப் போக்கிற்கும் இது மாபெரும் ஆழந்த செல்வாக்கை ஏற்படுத்துவது உறுதி என்று அவை கருத்து தெரிவித்துள்ளன.
இப்பயணம் மூலம், இரு நாட்டு ஒத்துழைப்புத் துறையில் கூட்டு வெற்றி பெறும் பரந்த எதிர்காலத்தைத் திறந்து வைக்க முடியும்.
இப்பயணத்தின் மூலம், புதிய சர்வதேச உறவு பற்றிய கருத்தை சீனா பரப்புரை செய்து முழு உலக அமைதி மற்றும் வளர்ச்சி என்ற இலட்சியத்தை விரைவுப்படுத்தும்.
மேலும், உலகிற்கு சீனாவின் சீர்திருத்த மற்றும் வளர்ச்சியை அறிமுகம் செய்து, சர்வதேசச் சமூகத்தில் சீனா தொடர்பான சீரான சரியான கருத்தை தலைவர் ஷி ச்சின்பிங் இப்பயணத்தின் மூலம் உருவாக்கியுள்ளார் என்று வாங் யீ கூறினார்.