• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க, ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
  2015-09-29 15:07:31  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவும், ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புதினும் செப்டம்பர் 28ஆம் நாள் ஐ.நா தலைமையகத்தில் உக்ரைன் மற்றும் சிரிய நாடுகளின் பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இப்பேச்சுவார்த்தையில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன என்று அமெரிக்க உயர் நிலை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். உக்ரைன் பிரச்சினையில் உக்ரைனின் அரசுரிமை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டை ஆதரிப்பதாக பராக் ஒபாமா மீண்டும் வலியுறுத்தினார். அடுத்த சில திங்களில் மின்ஸ்க் உடன்படிக்கையைச் செயல்படுத்துவதற்கு சாதகமான நிலைமை ஏற்படும் என கருதுவதாக இந்த அலுவலர் தெரிவித்தார்.

சிரிய அரசுத் தலைவர் பாஷர் தொடர்ந்து தலைமை பதவி வகிக்கும் பிரச்சினையில் அமெரிக்க, ரஷிய தலைவர்களிடையே அடிப்படை ரீதியான கருத்து வேற்றுமை நிலவுகின்றது. இப்பேச்சுவார்த்தையின் மூலம் அண்மைக்காலத்தில் சிரியாவில் ரஷியா ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையின் நோக்கம் பற்றி அமெரிக்கா தெளிவாக அறிந்து கொண்டுள்ளது என்றும் இந்த அலுவலர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040