உலக சுற்றுச்சூழல் நிதியம் மேற்கொண்ட சீனாவிலுள்ள மாசுபட்ட இடங்கள் மீதான மேலாண்மை திட்டப்பணிக்கான துவக்க நடவடிக்கை அண்மையில் லியௌ நிங் மாநிலத்தின் தலைநதர் ஷென் யாங்கில் நடைபெற்றது. மாசுபட்ட இடங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கொள்கையை வகுப்பதற்கு இத்திட்டப்பணி ஆதரவளிக்கும். உலக வங்கி, சீன சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம், மாசுபட்ட இடங்களின் உரிமையாளர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.
இத்திட்டப்பணியில் முதல் தொகுதியாக சேரும் லியௌ நிங் மாநிலமும் சோங் சிங் மாநகரும், முறையே 47 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 28 லட்சம் அமெரிக்க டாலர் உதவி தொகையை பெற்றுள்ளன.