அக்டோபர் 5ஆம் நாள் பிற்பகல் 6 மணி வரை, சீனாவின் குவாங் தூங் மாநிலத்தில் 31 லட்சத்து 67 ஆயிரம் பேர் இச்சூறாவளியால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காணாமல் போயினர். 243 பேர் காயமுற்றனர் என்று குவாங் தூங் மாநிலத்தின் பொதுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் குவாங் ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் 14 லட்சத்து 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 300 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன என்று இப்பிரதேசத்தின் பொதுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.