ஆப்கானிஸ்தான் அகதிகள் பிரச்சினை குறித்து, ஐ.நா. அகதிகள் ஆணையம் 6ஆம் நாள் ஜெனீவாவில் உயர்நிலை கூட்டம் ஒன்றை நடத்தியது. ஆப்கான் அகதிகள் பிரச்சினையில் நிலவுகின்ற கடுமையான நிலைமை மற்றும் பன்னாட்டுத் தன்மை, இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகம் தங்களது ஆதரவுகளை பெருமளவு அதிகரிக்கும் நிலையில் தான், அகதிகள் பிரச்சினை முன்னேற்றமடையும் என்று, ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் உயர் அதிகாரி அந்தோனியோ குட்டெர்ரேஸ் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
ஆப்கான் அகதிகள் பயனுள்ள முறையிலும் தொடர்ச்சியாகவும் நாடு திரும்புவது, பிரதேசத்தின் நிலைப்புத்தன்மைக்கு முக்கிய அடிப்படையிடும் என்பதை, சர்வதேசச் சமூகம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று குட்டெர்ரேஸ் கேட்டுக் கொண்டார். முக்கிய காலக் கட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கும் ஆப்கான் அகதிகளைப் பெற்றுள்ள நாடுகளுக்கும் ஆதரவு அளிப்பதே, ஒற்றுமையை வெளிக்காட்டுகிறது. அது மட்டுமல்லாமல், இந்நிகழ்வு சர்வதேச சமூகத்தின் பொது நலன்களுடன் தொபுடையது என்றும் குட்டெர்ரேஸ் குறிப்பிட்டார்.