சௌதி அரேபியாவில் பணியாற்றி வந்த தமிழ்நாட்டுப் பெண்ணின் கையை துண்டித்த சௌதியைச் சேர்ந்தவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விடுத்த சுட்டுரையில், சௌதி அரேபியாவில் இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த சோகத்தினால் நாங்கள் மிகவும் கவலைக்குள்ளானோம். இச்செயல் ஏற்றுக் கொள்ளவே முடியாது. பாதிக்கப்பட்டவருடன் அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது என்று பதிவு செய்திருந்தார்.
58 வயதான கஸ்தூரி முனிரத்னம், 3 மாதங்களுக்கு முன்புதான் சௌதி அரேபியாவுக்குச் சென்றார். அவர், வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றபோது அவரது வலது கையை, அவரை பணியில் அமர்த்தியவர் துண்டித்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.