பிரிட்டன் மற்றும் அமெரிக்கக் குடியுரிமை உடைய பொருளியலாளர் அங்குஸ் ஈடன், நுகர்வு, வறுமை ஒழிப்பு, சமூகப் பொதுநலன் ஆகிய துறைகளில் மேற்கொண்ட ஆய்வு சாதனைகளைப் பாராட்டும் வகையில், 2015ஆம் ஆண்டுக்கான பொருளியல் துறைக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை ஸ்வீடனின் ராயல் அறிவியல் கழகம் அக்டோபர் 12ஆம் நாள் அறிவித்தது.