• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக நிர்வாக முறை மேலும் நியாயமாக இருப்பதை முன்னேற்ற வலியுறுத்தல்
  2015-10-13 19:28:06  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்க் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு அக்டோபர் 12ஆம் நாள் மாலை, உலக நிர்வாக ஒழுங்குமுறை மற்றும் உலக நிர்வாக முறை குறித்து ஆய்வு செய்து விவாதம் மேற்கொண்டுள்ளது. மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் ஆய்வு வகுப்பில் பேசுகையில், உலக நிர்வாகத்தில் பங்கேற்கும் இறுதி குறிக்கோள், சீனத் தேசத்தின் பெரும் மறுமலர்ச்சி என்ற சீனக் கனவை அடைவதாக அமைந்துள்ளது என்று வலியுறுத்தினார்.

உலகளாவிய அறைகூவல்கள் அதிகரித்து வருவதுடன், உலக நிர்வாகத்தை வலுப்படுத்தி, உலக நிர்வாக முறைச் சீர்திருத்தத்தை முன்னேற்றுவது முக்கிய போக்கு ஆகும். இந்நிலையில், ஒத்துழைப்புடன் கூட்டாக வெற்றி பெறுவது என்பதை மையமாக கொள்ளும் புதிய பன்னாட்டு உறவை அமைக்க வேண்டும் என்றும், மனித குலத்தின் பொதுச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் முன்வைத்துள்ளதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

உலக நிர்வாக முறையில் நிலவுகின்ற நியாயமற்ற மற்றும் நேர்மையற்ற அமைப்புகளின் சீர்திருத்தங்களை முன்னேற்ற வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச பொருளாதார மற்றும் நாணய அமைப்புகளின் சீர்திருத்தத்தைத் தூண்டி, சர்வதேச ஒருங்குமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிக்காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், எரியாற்றல், உணவு, இணையதள தகவல், காலநிலைமாற்றம், பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட உலகளாவிய அறைகூவல்களை சர்வதேசச் சமூகம் சமாளிக்கும் திறமையை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040