சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 12ஆம் நாள் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உலக ஆட்சியை வலுப்படுத்தி, உலக ஆட்சிமுறைச் சீர்திருத்தத்தை முன்னேற்றுவது முக்கிய போக்கு ஆகும் என்று தெரிவித்தார்.
உலக ஆட்சிக் கருத்துக்களை சீனா வெளிப்படையாக முன்வைத்துத் தெளிவுப்படுத்துவது இதுவே முதல்முறையாகும். இணைந்த கலந்தாய்வு, இணைந்த கட்டுமானம், இணைந்த பகிர்வு என்பதை உலக ஆட்சிக் கருத்துக்களாக கொண்டு, சீனா, உலகின் மிக பெரிய வளரும் நாடு என்ற தகுநிலையுடன் உலக ஆட்சிப் பணிகளில் பங்கேற்கும் என்று தெரிகிறது.
இணைந்த கலந்தாய்வு என்பது, உலக ஆட்சியில் பங்கேற்கும் அனைத்து தரப்புகளும் இணைந்து கலந்தாய்வு நடத்துவது என்னும் நிலையிலானக் கொண்டது.
இணைந்த கட்டுமானம், பல்வேறு தரப்புகளும் தத்தமது மேன்மைகளையும் உள்ளார்ந்த சக்திகளையும் வெளிக்கொணர்ந்து கட்டுமானத்தைத் தொடர்ந்து முன்னேற்றுவதாக அமையும்.
இணைந்த பகிர்வு, உலக ஆட்சிமுறையில் ஏற்படும் சாதனைகள் மேலும் நியாயமான முறையில் பல்வேறு தரப்புகளுக்கும் நன்மை பயக்கும் வழிமுறையாகும்.