சீனாவில் 12வது ஐந்தாண்டு திட்டம் நடைமுறைக்கு வந்த காலத்தில், 10கோடியே 6இலட்சத்து 80ஆயிரம் கிராமவாசிகள், கிராமத்தில் வாழ்கின்ற ஒரு கோடியே 52இலட்சத்து 10ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குடிநீர் பாதுகாப்புப் பிரச்சினை தீர்க்கப்பட்டது என்று சீன நீர் சேமிப்புத் துறை அமைச்சகம் 15-ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறியது.
மேலும், நீர் மண் அரிப்பு நிலைமை காணப்படும் பிரதேசங்களை சீன அரசு கட்டுப்படுத்தும் பரப்பளவு, சுமார் 38ஆயிரம் சதுர கிலோமீட்டரை எட்டியது. இது தொடர்பான முக்கிய திட்டப்பணிகள் சீனாவின் 459 வறிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.