இந்தோனேசியாவின் ஜகார்தாவிலிருந்து பாண்டுங்கிற்குச் செல்லும் உயர்வேக இருப்புப்பாதையின் கட்டுமானம் மற்றும் இயங்குதல் பற்றி சீனாவும் இந்தோனேசியாவும் உடன்பாட்டை உருவாக்கியுள்ளன. சீன இருப்புப் பாதைக் கூட்டு நிறுவனமும் இந்தோனேசிய அரசு சார் நிறுவனக் கூட்டணியும் 16ஆம் நாள் தொடர்புடைய உடன்படிக்கையில் அதிகாரப்பூர்வமாகக் கையொப்பமிட்டன. இந்த இருப்புப்பாதை கட்டிமுடிக்கப்பட்டப் பின், ஜகார்தாவிலிருந்து பாண்டுங்கிற்குச் செல்லும் பயண நேரம் தற்போது இருந்த 3 மணியிலிருந்து 40 நிமிடங்களாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.