சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கின் பிரிட்டன் பயணத்தை முன்னிட்டு, சீன மக்கள் நாளேடு கோ ஜி பிங் எழுதிய கட்டுரையை 19ஆம் நாள் வெளியிட்டது.
கடந்த பத்து ஆண்டுகளில், சீன அரசுத் தலைவர் பிரிட்டனில் அரசு முறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். ஐரோப்பாவை எதிர்நோக்கும் இன்னொரு முக்கிய தூதாண்மை நடவடிக்கையும் இதுவாகும் என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.
அறைகூவலுக்கு பதிலாக, சீனாவின் வளர்ச்சி பிரிட்டனுக்கு வாய்ப்புகளை தந்துள்ளது என்று பிரிட்டன் அரசு பலமுறை தெரிவித்துள்ளது. இதனால், இரு நாட்டு தலைவர்களுக்கிடையே பரிமாற்றம் அதிகரித்துள்ளது. வர்த்தகம், முதலீடு, நாணயம், பண்பாடு, மனித தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பும் பரந்துபட்ட ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளன.
சீன-ஐரோப்பிய உறவு, விறுவிறுப்பாக வளர்ந்து வரும் புதிய கால கட்டத்தில் நுழைந்துள்ளது. கல்வி, அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு, செய்தி ஊடகம், இளைஞர், மகளிர் ஆகிய துறைகளில், இரு தரப்புகளுக்கிடையே பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளன.
சீனாவும் ஐரோப்பாவும் சீர்திருத்தப் போக்கில் முன்னேறி, இரு தரப்புகள் ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்புகளை அதிகரிப்பதுடன், சீன-ஐரோப்பிய உறவு, மேலதிக உயிராற்றலைக் காட்டி, உலகத்துக்கு மேலதிக நலன்களை உருவாக்கும் என்றும் இக்கட்டுரை கூறுகிறது.