சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பீங் லண்டனிலுள்ள சாம்ராஜியக் கல்லூரியைப் உள்ளூர் நேரப்படி, அக்டோபர் திங்கள் 21ஆம் நாள், பார்வையிட்டுள்ளார்.
அதன் பிறகு, சீன மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் பிரதிநிதிகளுடன் ஷி ச்சின் பீங் மனம் திறந்து உரையாடினார். மேலும், சீன-பிரிட்டன் அறிவியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் இரு நாட்டுப் பொது செழுமைக்குப் பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.