சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் லண்டனிலுள்ள நாணய நகர் மண்டபத்தில் 21ஆம் நாள் உரை நிகழ்த்தினார். நெடும்பார்வையுடனும் திறப்பான மனப்பாங்குடனும், சீனாவும் பிரிட்டனும் ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றியைப் பெற வேண்டும் என்றும், மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி இலட்சியத்துக்கு மேலும் மாபெரும் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
சீனாவின் வளர்ச்சிப் பாதை பற்றி அவர் கூறுகையில்,
சோஷலிசப் பாதை சீன வரலாறு மற்றும் மக்களின் தேர்வாகும் என்றும், சீனா உலகிலுள்ள மிகப் பெரிய வளரும் நாடாகும். ஆகவே, இனிமையான வாழ்க்கைக்காக சீன மக்கள் நீண்டகால முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அமைதி மற்றும் வளர்ச்சி படைத்த உலகை உருவாக்க சீன மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.