சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 19 முதல் 23ஆம் நாள் வரை பிரிட்டனில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இப்பயணம் நிறைவுபெறும்போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ செய்தியாளர்களைச் சந்தித்து, இந்தப் பயணத்தை தொகுத்து கூறினார்.
பிரிட்டனில் பயணத்தின்போது, பேச்சுவார்த்தை, சொற்பொழிவு, பேட்டி ஆகியவற்றின் மூலம், அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சீனாவின் கொள்கைகளையும் கருத்துக்களையும் விளக்கி, பன்னாட்டுச் சமூகத்தின் கவனங்களுக்கு பதில் அளித்துள்ளார் என்று வாங்யீ குறிப்பிட்டார்.
சீன வளர்ச்சிப் பாதை மீது வெளிநாடுகள் எழுப்பிய சந்தேகம் குறித்து பேசுகையில், சீன மக்கள் நல்ல வாழ்க்கையையும் அமைதியான மற்றும் வளர்ச்சியான உலகத்தையும் எதிர்பார்க்கின்றனர் என்றும், எவரும், எந்த விஷயமும் மற்றும் எந்த காரணம், அமைதி வளர்ச்சிப் பாதையை பின்பற்றுவதற்கான சீனாவின் மனவுறுதியை மாற்ற முடியாது என்றும் வுஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
மேலும், சீனாவின் திறப்பு, பொறுப்பு ஏற்கும் பெரிய நாடு என்ற புகழ் ஆகியவற்றை, பயணத்தில் ஷிச்சின்பிங்கின் விளக்கம் வெளிக்காட்டியது. அது, சர்வதேச சமூகம் சீனாவை அறிந்து கொள்வதை மேம்படுத்தியுள்ளது என்றும் வாங்யீ கருத்துத் தெரிவித்தார்.