இரு குழந்தைகள் கொள்கை குறித்து ஷிச்சின்பிங் கருத்து
2015-11-04 09:44:02 cri எழுத்தின் அளவு: A A A
நவம்பர் 3ஆம் நாள் வெளியிடப்பட்ட 13ஆவது ஐந்தாண்டு திட்டத்துக்கான ஆலோசனையில், ஒரு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கும் கொள்கை பன்முகங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், இந்த ஆலோசனையின் வரைவுப் பணி குறித்து 18ஆவது மத்திய கமிட்டியின் 5ஆம் முழு அமர்வில் இது பற்றி விரிவுரை வழங்கினார். இக்கொள்கையைச் செயல்படுத்தினால், பிறப்பு விதிகம் அதிகரிக்கும். இதனால் முதியோரின் விகித அதிகரிப்பு ஏற்படுத்தும் அழுத்தத்தைக் குறைத்து, உழைப்பாற்றலை உருவாக்கி, மக்கள் தொகையின் சரிசம நிலையை முன்னேற்ற முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய