• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் புதிய பயணம்
  2015-11-10 15:50:29  cri எழுத்தின் அளவு:  A A A   

நவம்பர் 15,16 ஆகிய நாட்களில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் துருக்கியின் ஆந்தரியாவில் நடைபெறவுள்ள 20 நாடுகள் குழுமத்தின் தலைவர்களது உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார். அதற்குப் பின், பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களது 23ஆவது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்து கொள்வார். சீன வெளியுறவு அமைச்சகம் 10ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டம் நடத்தி இப்பயணத்தின் நோக்கம் பற்றி விவரித்தது.

 சீனத் துணை நிதி அமைச்சர் சூ குவாங்யாவ் இதில் கூறியதாவது, தற்போது உலகப் பொருளாதார நிலைமை 2009ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மிக தாழ்ந்த நிலையில் உள்ளது. முழு உலகின் வர்த்தக நிலைமை மந்தமான நிலையில் சிக்கியுள்ளது. அமெரிக்காவின் நிதிக் கொள்கை, யூரோ பிரதேசத்தின் நிதி கொள்கை ஆகியவை வேறுபட்ட திசை நோக்கி செயல்படுகின்றன. இவை அனைத்தும் முழு உலகின் நிதிச் சந்தையில் சிக்கலான நிலைமையை ஏற்படுத்தி வருகின்றன. ஆந்தரிய உச்சிமாநாடு மூலம், உலகப் பொருளாதார வளர்ச்சியின் மீதான நம்பிக்கையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றோம் என்று அவர் கூறினார்.

இவ்வுச்சி மாநாட்டில், கலந்து கொள்ளும் போது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உலகப் பொருளாதார நிலைமை பற்றிய கருத்துக்களை வெளியிடுவார். அறைக்கூவல்களைச் சமாளிப்பது, புதிய வளர்ச்சி ஆற்றலை தட்டியெழுப்புவது ஆகியவை பற்றி அவர் முன்மொழிவுகளை வழங்குவார். மேலும் சீனப் பொருளாதார நிலைமை பற்றிய கேள்விகளுக்கும் அவர் பதிலளிப்பார்.

 தவிர, இவ்வுச்சி மாநாட்டுக்கு முன், சீனா, ரஷியா, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகியவை வழக்கத்தின்படி பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தும் என்று தெரிகிறது.

அண்மையில் தென் சீனக் கடல் பிரச்சினையில் பிலிப்பைன்ஸ் வேண்டுமேன்றே இடையூறு விளைவித்து வருகின்றது. அதனால், சீன-பிலிப்பைன்ஸ் உறவு சிக்கலுக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் கலந்து கொள்வரா மாட்டாரா என்பது மிக அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இது பற்றி சீனத் துணை வெளியுறவு அமைச்சர் லீ பாவ்துங் கூறியதாவது சீனா எபேக் அமைப்பின் பணியில் அதிக முயற்சி மேற்கொண்டு ஆக்கப்பூர்வமாகப் பங்களித்து வருகின்றது. ஆசிய பசிபிக் பிரதேசத்தின் ஒத்துழைப்புத் துறையில் இவ்வமைப்பின் முக்கியத்துவத்தில் சீனா மிகவும் கவனம் செலுத்துகின்றது. கடந்த ஆண்டில், பெய்ஜிங்கில் நடைபெற்ற எபேக் கூட்டத்தில் எட்டப்பட்ட சாதனைகளை நடைமுறைப்படுத்த சீனா தொடர்ந்து பல்வேறு தரப்புகளுடன் இணைந்து முயற்சி செய்யும் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040