முந்தைய தாய்காங் வீதி தூசிகள் நிறைந்த சிறிய தெருவாக இருந்தது. வணிகர் மற்றும் கலைஞர்களின் வருகை, அதனை கலையின் நறுமணம் வீசும் வீதியாக மாற்றியுள்ளது. கலைக் காட்சியகங்கள், நேர்த்தியான கையெழுத்து மற்றும் ஓவியப் படைப்புகளை விற்பனை செய்யும் கடைகள், அருங்கலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை இந்த வீதியில் அதிகமாக உள்ளன. தாய்காங் வீதி தனது தனிச்சிறப்புடன் தியன் ச்சி ஃபாங் எனும் இடத்தின் புத்தாக்கத் தன்மையை அதிகரித்துள்ளது. தாய்காங் வீதியின் கிழக்கு முனையில் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் சென் யிஃபேய் வடிவமைத்த கலை நுழைவாயில் எனும் சிற்பம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. அது, தாய்காங் வீதியின் அடையாளம் என கருதப்படுகிறது. அங்கே சென்று வரும் பயணிகள் அது ஏற்படுத்திய கலை சூழலால் ஈர்க்கப்படுகின்றனர்.