தியன் ச்சி ஃபாங் இடம், தாய்காங் வீதியிலுள்ள சாரமான பகுதி என கூறலாம். நவ நாகரிகமுடைய கலை இடமாக அது திகழ்கிறது. இவ்விடத்தில் ஒவ்வொரு பொருளின் கலைக்குரிய ஈர்ப்பாற்றல் அலட்சியம் செய்யப்படக் கூடாது. அங்குள்ள 5 மாடிகளுடைய தொழிற்துறை கட்டிடத்தில், சுமார் 10 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பல்வகை பணிமனைகளைத் திறந்து வைத்துள்ளனர். இவை உங்களுக்கு அகத்தூண்டலைக் கொண்டு வரலாம்.