சௌ சிங் பாதை, 1926ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 480 மீட்டர் நீளமுடைய பாதையின் இரு பக்கங்களில், புத்தகக் கடை, ஓவிய கலைக்கூடம், வெளியீட்டகம் உள்ளிட்ட பண்பாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன. கோடைக்காலத்தில் சௌ சிங் பாதை மிக அழகான காட்சிகளை அளிக்கும். அப்போது மரங்களின் அடர்த்தியான இலைகளுக்கிடையில் சூரிய ஒளியின் பிரதிபலிப்பு, மகிழ்ச்சி தரும் அமைதியான சூழலை வழங்கும்.