• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷீ ச்சின்பிங் துருக்கி நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்
  2015-11-14 16:41:44  cri எழுத்தின் அளவு:  A A A   

20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டிலும், ஏபெக் அமைப்பின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திலும் கலந்து கொள்ளும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 14ஆம் நாள் காலை பெய்ஜிங்கிலிருந்து துருக்கியின் அன்தால்யா நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

20 நாடுகள் குழு தலைவர்களின் 10ஆவது கூட்டம் நவம்பர் 15, 16 ஆகிய நாட்களில் அன்தால்யாவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின் போது, ஷீ ச்சின்பிங் தொடர்புடைய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்புறவு பற்றியும் பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார். இக்கூட்டத்துக்கு முன் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் வழக்கம் போல் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இப்பேச்சுவார்த்தையில் ஷீ ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு முடிவுக்கு வந்த பின், ஷீ ச்சின்பிங் பிலிப்பைன்ஸின் மணிலாவுக்குச் சென்று, ஏபெக் அமைப்பின் தலைவர்களது 23ஆவது அதிகாரப்பூர்மற்ற கூட்டத்தில் கலந்து கொள்வார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040